புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

விளையாட்டு வினையானால் அது விளையாட்டல்ல


வாழ்வில் மேற்கொள்ளும் சில கடமைகளோ, உறவுகளோ ஒரு விளையாட்டின் அங்கம்தான் என்ற புரிதலுடன் ஈடுபடும் சிலரே, காலப்போக்கில் அது வெறும் விளையாட்டுதான் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்-லோரையும் எப்போதும் வெல்ல வேண்டும் என்கிற உந்துதல், விளையாட்டை வினையாக்கி விடுகிறது. அதன்பின்னர், எல்லாம் என் முட்டாள்தனத்தால் வந்தது என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறார்கள்.
Download As PDF

ஈஷா யோகா - உறுதியின் பாதை



நீங்கள் முதலில் உணர வேண்டியதே, நீங்கள் சில குறுகிய எல்லைகளுக்குள் இயங்குகிறீர்கள் என்பதைத்தான். உங்கள் நம்பிக்கைகள்தான் உங்களை அதிகம் ஏமாற்றுகின்றன. கடவுளை நம்புவதாக நினைக்கிறீர்கள். அச்சமின்றி வாழ்வதாக எண்ணுகிறீர்கள். ஆனால் அடுத்த வீட்டு நாய் துரத்தினால்கூட அலறிக் கொண்டு ஓடுகிறீர்கள்.

உங்களை பாதுகாப்பாக உணரச்செய்யும் உங்கள் நம்பிக்கைகளைப் போல் உங்களை ஏமாற்றக் கூடிய விஷயம் எதுவுமில்லை. எனவே, அச்சம், பதட்டம் ஆகிய குறுகிய எல்லைகளுக்குள் நீங்கள் வாழ்வதை முதலில் உணர வேண்டியது அவசியம். சொல்லப்போனால் உங்கள் அடிப்படை உணர்வே அச்சம்தான்.
Download As PDF

இதுதான் வாழ்க்கை!

ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான். நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொங்கினான். தொங்கிக் கொண்டே கீழே குனிந்து பார்த்தால், சரிவின் கீழே ஒரு ஆறு ஓடியது. அந்த ஆற்றில்  ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு இவன் கீழே விழுவதற்காகக் காத்திருந்தது.

Download As PDF

நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!

நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!” என்று அண்மையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
‘நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!” என்று சிரித்தேன்.
Download As PDF

நிலா வந்தாச்சு

நமது வாழ்க்கை என்பது காலமும் சக்தியும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. இதில் காலம் அல்லது நேரம் என்பது யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தை அளப்பதற்கு நாமே சில வழிமுறைகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறோம். பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம். பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு, சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றி சந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தே இருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் சந்திரனைப் பொறுத்து, அந்தந்தக் காலகட்டத்தில் பூமி இருக்கும் இடம், நம் உடல் மற்றும் மனதின்  செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Download As PDF

சர்ப்ப சேவா

இந்த நவீன காலத்தில் இரண்டு பேர் சேர்ந்து சுமுகமாக இருக்க முடிவதில்லை. அது கணவன் மனைவி என்று மட்டுமில்லை. உடன் பிறந்தோர் இருவர் அல்லது அப்பாவும் மகனும் அல்லது நண்பர்கள் இருவர் அல்லது வியாபாரக் கூட்டாளிகள் இருவர்  தாங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினாலும் பல நேரங்களில் அப்படி சேர்ந்து இருக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஆனால் இவற்றில் மிகவும் பாதிக்கப்படுவது என்னவோ கணவன் மனைவிதான்.
நமது ஆன்மீகக் கலாச்சாரத்தில் இதற்கெல்லாம் சூட்சுமமான தீர்வு வைத்திருந்தனர். பல சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த ஆன்மீக வழிமுறையை ஒட்டி லிங்கபைரவி திருக்கோவிலிலும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் பல பயன்களுக்கு பல சடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சர்ப்ப சேவா. இரு நபர்கள்  கணவன் மனைவி, அப்பா மகன், இரு நண்பர்கள், இரு வியாபாரக் கூட்டாளிகள் என்று இருவர் சேர்ந்து இந்த சர்ப்ப சேவையில் பங்குபெறும்போது அவர்களுக்குள் நீடித்த நிலையான உறவு நிகழ்கிறது.
Download As PDF

பிரபலமான கட்டுரை