நீங்கள் முதலில் உணர வேண்டியதே, நீங்கள் சில குறுகிய எல்லைகளுக்குள் இயங்குகிறீர்கள் என்பதைத்தான். உங்கள் நம்பிக்கைகள்தான் உங்களை அதிகம் ஏமாற்றுகின்றன. கடவுளை நம்புவதாக நினைக்கிறீர்கள். அச்சமின்றி வாழ்வதாக எண்ணுகிறீர்கள். ஆனால் அடுத்த வீட்டு நாய் துரத்தினால்கூட அலறிக் கொண்டு ஓடுகிறீர்கள்.
உங்களை பாதுகாப்பாக உணரச்செய்யும் உங்கள் நம்பிக்கைகளைப் போல் உங்களை ஏமாற்றக் கூடிய விஷயம் எதுவுமில்லை. எனவே, அச்சம், பதட்டம் ஆகிய குறுகிய எல்லைகளுக்குள் நீங்கள் வாழ்வதை முதலில் உணர வேண்டியது அவசியம். சொல்லப்போனால் உங்கள் அடிப்படை உணர்வே அச்சம்தான்.

